Peranbu | பேரன்பு | August 26, 2023 | Tamil Serial Reviews | மாப்பிள்ளை ஒடிற்றான் - மாற்றானான மாப்பிள்ளைக்கு அரேஞ்மன்ற்  ரெடிமேட் மாப்பிள்ளை ஏற்கனவே றெடி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

என்னுடைய channelஐ முதன் முறையாகப் பார்ப்பவர்கள் subscribe செய்ய மறக்க வேண்டாம்.

அத்துடன் எனது இந்த channelஐ ஏற்கனவே பார்த்த, subscribe செய்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கார்த்திக்கை கடத்தி வைத்தவன் ஷாம் - ஷென்மதியுடைய மூளையைச் சலவை செய்து, தன்னைக் கல்யாணம் பண்ணக்கூடிய மாதிரியான ஒரு (situation) சிற்றுவேஷனை கல்யாண வீட்டிலே உருவாக்கிக் கொண்டிருக்கிறான் ஷாம்.

இதற்கு ஜால்றா போட்டுக் கொண்டிருக்கினம் பவானியும், பாட்டியும். பவானியும் பாட்டியும் ஏதோ தாங்கள் தான் பெரியவர்கள் இந்தக் குடும்பத்திற்கு என்ற நினைப்பு வேற.

பவானி, ஐயப்பபாண்டியின் குடும்பத்திற்கு வாழ வந்தவ - மூத்த மருமகள் - அவரின் பிள்ளைகளுக்கு தாய் ஸ்தானத்தில் உள்ளவ அல்லவா? அதைவிட்டு விட்டு அக்குடும்பமே தன் சொல்லுக்குத்தான் அடிபணிய வேண்டும் என்ற நினைப்பு. இதுதான் பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதோ.

கார்த்திக்கைக் கடத்தி வைத்துக் கொண்டு தெனாவெட்டாய்க் கதைக்கும் ஷாமிற்கு அடுத்த செக்கன் என்ன நடக்கப் போகிறதென்று தெரியாமல் ஏதோ ஷென்மதியுடைய வாழ்க்கையில பெரிய அக்கறைமாதிரி ஷென்மதியை அடையிறதற்காக செய்யும் தில்லாலங்கடி வேலைகளைப் பார்த்தீங்களா.

றாஜீயம்மாவின் மனதினுள் நவிகேஷன் ஒன்று ஓடிக்கொண்டிருக்கின்றது கார்த்திக்கை கூட்டிக்கொண்டு எவ்வளவு தூரத்தில் வருகிறார்கள் என்று.

பவானியுடன் சமா வைப்பவர்கள் எல்லாம் இப்பதான் கரையில நின்று குளிப்பவர்களாச்சே! ஆனால், றாஜீயம்மா சமுத்திரத்தினுள்ளே சுழி ஓடித் திமிங்கலத்தைப் பிடிக்கிறவாச்சே!

ஐயப்பபாண்டிக்கும், மங்கைக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க, ஷென்மதியும் கலங்கிப் போய் அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்கிற்று. அவளுக்கும் ஒரு டவுட் வந்திருக்குமோ - ஏனென்றால் அவளும் ஒரு பெண்தானே!

ஆனால் ஒன்று, ஷென்மதிக்கு ஒரு டவுட்டும் வந்திருக்கச் சந்தர்ப்பமே இல்லை. ஏனென்றால், எதுவும் கேட்காமலே, கார்த்திக்கைப் பற்றி ஒன்றும் அறியாமலே, மேலும் கார்த்திக்கைப் பற்றி அறியக்கூட அவள் முயற்சிக்காமலே காதலிக்கத் தொடங்கியவள் ஷென்மதி. கார்த்திக்கு அவள் மனதினுள் இடம் கொடுத்தவள் ஷென்மதி. கல்யாணம் பண்ணினால் கார்த்திக்கத்தான் கல்யாணம் பண்ணுவன், எவ்வளவு காலம் போனாலும் உங்கள் மகளாக இந்த வீட்டிலதான் இருப்பேன் என்று தகப்பனிடம் அடி வாங்கியும், அமைதியாக ஆனால் இறுக்கமாகவும், உறுதியாகவும் சொன்னவளின் மனமா இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும். Never (நெவர்).

ஆனால், மனதினுள் அவளுக்கு ஒரு பயம், அதாவது, கார்த்திக் எங்கே போனான்? - ஏன் போனான்? என்ன நடந்தது கார்த்திக்கு? என்றெல்லாம் அவள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கத்தான் அவள் கண்களை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லையே!

அவளும் ஒரு பெண்தானே!

ஷென்மதியின் குடும்பத்தினருக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் அடங்கிப் போயிருக்கையில் ஒருவர் முகத்திலும் ஈ கூட ஆடாத வகையாக கார்த்திக் மிஸ்ஸிங்கானது பெரிய கலக்கத்தையும், பீதியையும் உருவாக்கிற்று.
மகளின் வாழ்க்கைக்குப் பதில் என்ன? - விடைதெரியா கேள்விக்கு பதிலின்றி அவதியுறும் குடும்பம்.

கார்த்திக் மிஸ்ஸிங்கான இரவு, அதாவது, கல்யாணத்திற்கு முன்னைய இரவு ஒருவரும் எதிர்பார்க்காதவாறு இடி விழுந்து விட்டதை ஒருவராலும் ஜீரணிக்க முடியாது திணறிக் கொண்டிருந்த சமயம் தான் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றது.

ஷென்மதி திடீரென சிரிக்கத் தொடங்கி விட்டா, கார்த்திக் என்று ஏக்கத்துடன் எழுந்து நின்றதை மங்கை பார்த்து ஷென்மதிக்கு ஏதாவது நடந்து விட்டதோ என்ற வியக்கையிலேதான் அந்த எதிர்பாராத, ஆனால் மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.

கார்த்திக் என்று குளறிக் கொண்டு எழுந்தோடலானாள், ஷென்மதி. அப்போதுதான் தெரிந்தது கார்த்திக்கைக் கண்டுதான் ஷென்மதி ஒடுகிறாள் என்று.

இதனால், ஐயப்பபாண்டியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. றாஜீயம்மாவிற்கு அது தெரிந்ததுதானே!

அனால், எவ்வாறு இது நடந்தது என்று தலையைப் பிய்க்காத குறையாய் பவானியும், பாட்டியும் விளிபிதிங்கிப் போனார்கள். .

நான் நேற்றைய றிவூவில சொன்னனான்தானே கார்த்திக் மயக்க நிலையினில் தள்ளாடி கூட்டி வரப்படுவார், அதுவும் றாஜேஸ்வரியின் ஆட்கள் கூட்டி வருவார்கள் என்று. நடைபெற்றது தானே?

ஆனால், றாஜேஸ்வரியுடைய ஆட்கள் கடத்தல் குறூப்பைப் பிடித்து கொடுக்கிற treatment - இருக்கே - அது வேற லெவல். அந்த treatment இல (றீற்மன்ற்) ஷாமுடைய ஆட்களால ஷியாம் அகப்பட வாய்ப்புகள் உண்டு என்று சொன்னனான்தானே.

இப்பவும் சொல்லுறன் பாட்டியும், பவானியும் லிஸ்ட்டில கடைசியாகத்தான் இருப்பினம்.

கார்த்திக்கை கல்யாண மண்டபத்திற்குக் கொணர்ந்தவர்கள் றாஜேஸ்வரிக்கும் காட்டும் சைகையினை யாரும் கவனிப்பார்களா? இந்த சிரியலில அப்படி ஒருதரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு டவுட். றாஜேஸ்வரி காட்டின சைகையினை பவானி அவதானித்திருப்பா என்று நினைக்கின்றேன். ஏனென்றால், பவானியின் கண்களுக்கு இவை அகப்படாமல் போகாது. அவதானிப்பதில் கெட்டிக்காறி பவானி.

நான் எனது கொமென்ற்றில் முன்பு சொன்னபடி றாஜேஸ்வரி ஒவ்வொருவராகக் கிளீயர் பண்ணுவாவா, கார்த்திக் - ஷென்மதி கல்யாணத்திற்கு முன்பு.
அது இப்ப ஷாமிலிருந்து நடக்கத் தொடங்கிவிட்டது.

அதில் முதல்வனாக ஷாம் அகப்பட்டு விட்டான்.

இனி, அமுதாவும், ஆர்த்தியும் கல்யாண மண்டபத்தினுள் என்ர (enter) பண்ணுகினம். இந்தப் பலிக்கடாக்கள் தாங்களாகவே தலையினை நீட்டிக் கொண்டு வருகினம்.

கார்த்திக் கடத்தலை நினைக்காத றாஜேஸ்வரி இனி அலேட்டாக இருப்பா.

அந்த சமயம்தான் அமுதாவும், ஆர்த்தியும் மாறு வேடத்தில் வருகினம் - இந்தவகையான மாறுபட்ட உடுப்புடன் வருவது ஒரு Negative point -(நெகட்டிவ் பொயின்ற்றாகத்)தான் எனக்குப் படுகின்றது. இவர்கள் றாஜேஸ்வரியின் குடும்பக் கதைகளைத் தொடங்கத்தான் வேண்டும். நான் நினைக்கிறேன் அமுதா கதையினை மங்கையிடம்தான் சொல்வா என்று நினைக்கின்றேன்.

ஆனால், அமுதாவும், ஆர்த்தியும்தான் next (நெக்ஸ்ட்) ஆக றாஜேஸ்வரியின் வலையில் அகப்படப்போகினம். அத்துடன், கல்யாணம் முடியுமட்டும் றாஜேஸ்வரியின் control (கொன்றோலில)தான் அவர்கள் இருப்பார்கள்.

உங்களை அடுத்த சீரியலின் றிவூவில சந்திக்கின்றேன். நன்றி - வணக்கம்

மேலதிக செய்திகள் | Additional News

Peranbu | பேரன்பு | August 26, 2023 | Tamil Serial Reviews | மாப்பிள்ளை ஒடிற்றான் - மாற்றானான மாப்பிள்ளைக்கு அரேஞ்மன்ற்  ரெடிமேட் மாப்பிள்ளை ஏற்கனவே றெடி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 18.05.2026

Read More
Peranbu | பேரன்பு | August 26, 2023 | Tamil Serial Reviews | மாப்பிள்ளை ஒடிற்றான் - மாற்றானான மாப்பிள்ளைக்கு அரேஞ்மன்ற்  ரெடிமேட் மாப்பிள்ளை ஏற்கனவே றெடி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 18.05.2026

Read More
Peranbu | பேரன்பு | August 26, 2023 | Tamil Serial Reviews | மாப்பிள்ளை ஒடிற்றான் - மாற்றானான மாப்பிள்ளைக்கு அரேஞ்மன்ற்  ரெடிமேட் மாப்பிள்ளை ஏற்கனவே றெடி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Varisu - வாரிசு - 16.05.2026

Read More
Peranbu | பேரன்பு | August 26, 2023 | Tamil Serial Reviews | மாப்பிள்ளை ஒடிற்றான் - மாற்றானான மாப்பிள்ளைக்கு அரேஞ்மன்ற்  ரெடிமேட் மாப்பிள்ளை ஏற்கனவே றெடி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Mahanadhi - மகாநதி - 15.05.2026

Read More